Sunday, March 7, 2010

முதல் சுவாசம்



முக்கடலின் சங்கமதிலே
அலைகள் பேசும் கடல் நடுவினிலே
உன் விரல் தொட்டு
என் இதழ் பதித்து
நான் கொண்ட நேசம் பேசிவிட ஆசை ...!
உன் நினைவுகளிடம் அடிமையான
என் உணர்வுகளின் கருவை
நான் பிரசவிக்கும் காலமெது

நாலிரண்டு ஆண்டுகளாய் என்காதல்
கருவறையில் நான் சிதைத்து வைத்த
சிசுவை கல்லறையின் வாசலிலே
பெற்றெடுக்கும் தருணத்துக்காய்
விழியிரண்டில் நீர் சுமந்து
வலிகளின் சுமைதாங்கியாய் நிற்கின்றேன் ....!
உன் வரவை எதிர்நோக்கி ...?

அலைகளில் சிக்கிய கிளிஞ்சல்களை போல
உன் நினைவுகளிடம் சிக்கிய
என் சுவாச காத்திருப்பு
வெண்பனியாய் உனை தீண்டலையோ ..!
என் நேசம் சொல்லலையோ ....?




தொலைதூர நண்பனிடம்

என்னுடைய மரணம் வாங்கி

நள்ளிரவின் விசும்பலோடு

உள்மனம் அறியாமல்

உன்னிரு கண்கள் சிந்தும்

இருதுளி உப்புநீர் கவிதையில் தானடி

என் காதல் சிசுவுக்கான முதல்சுவாசம் காத்திருக்கிறது .....!!!

No comments:

Post a Comment